தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்தர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப்-4 பணியிடங்களுக்கு ஏற்பட்டுள்ள மொத்தம் 5 ஆயிரத்து 566 காலியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விளம்பர எண்: 361/2013
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 14.06.2013
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. இளநிலை உதவியாளர் - 3,469
2. தட்டச்சர் - 1,738
3. சுருக்கெழுத்தர் - 242
கல்வித்தகுதி: அனைத்து பதவிகளுக்குமான பொதுவான கல்வித்தகுதி. குறைந்தபட்சம் பொதுக்கல்வித்தகுதி அதாவது பள்ளி இருதி வகுப்பு(10-ம் வகுப்பு) அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதியில் தேர்ச்சி பெற்று மேல்நிலைப் பள்ளஇ பள்ளிக்கல்வி அல்லது கல்லூரிக் கல்வி படிப்பில் சேர்வதற்கான தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
தேர்வு கட்டணம்: அனைத்து பதவிகளுக்கும் ரூ.75. விண்ணப்பக் கட்டணம் ரூ.50. மொத்தம் ரூ.125. இதனை வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலம் 17.07.2013-க்குள் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: ஜூலை 15.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 25 தமிழகம் முழுவதும் 258 மையங்களில் நடைபெறுகிறது.
மேலும் தேர்வு மையங்கள், வயதுவரம்பு, துறைவாரியான கல்வித்தகுதி உள்ளிட்ட முழுமையான விவரங்களை அறிய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.